Document
  • News
  • National Voters Day Human Chain – Awareness Programme

Nazareth Margoschis College at Pillaiyanmanai - National Voters Day Human Chain – Awareness Programme

National Voters Day Human Chain – Awareness Programme:

news image

31 January 2020

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின மனித சங்கிலி:


தமிழக அரசின் ஆணையின்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் வழிகாட்டுதலின்படி தேசிய வாக்காளர் தினம் சார்பாக மனித சங்கிலி நிகழ்வு நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர். அந்தோணி செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர் முனைவர். பெரியநாயகம் ஜெயராஜ் தலைமை தாங்கி வாக்களித்தலின் அவசியம் பற்றி பேசினார். கல்லூரி நிதிக் காப்பாளர் முனைவர். குளோரியம் அருள்ராஜ், விலங்கியல் துறைத் தலைவர் முனைவர். பிராங் மெரின், முனைவர். பிரவீன் பீற்றர் கலந்து கொண்டார்கள். வாழையடி பேருந்து நிறுத்தத்திலிருந்து இருபுறமும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் கைகோர்த்து நின்றார்கள். ஒவ்வொருவரும் வாக்காளராக பதிவு செய்தல் மற்றும் வாக்களித்தலின் அவசியம் பற்றிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரிச் செயலர் எஸ்.டி.கே. ராஜன் ஆலோசனையின் படி கல்லூரி துணை முதல்வர் முனைவர் பெரியநாயகம் ஜெயராஜ் தலைமையில் திட்ட அலுவலர்கள் முனைவர். முனைவர். அந்தோணி செல்வகுமார், முனைவர் சாமுவேல் தங்கராஜ் கோரேஸ், முனைவர். கீதாஞ்சலி, முனைவர். சாந்தி சலோமி, முனைவர். பியூலா ஹேமலதா மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.